Thursday, July 29, 2010

வழித்துணை



பின் செல்லும் மரங்கள் காட்டி. . . .
மழையில் தேநீர் பருகி. . . .
குகைக்குள் அலறி. . . .
கொண்டு வந்த புத்தகம் பகிர்ந்து. .  . .
பழகிப் பழகி. . . .
நீ இறங்கிச் சென்றுவிட்டாய்
நீ சென்ற இடத்தில்
நின்றுகொண்டிருக்கிறேன்
வந்த ரயில்
சென்றுவிட்டது!

-தமிழ் வசந்தன்