Wednesday, July 28, 2010

சொன்னாயே ஒரு வார்த்தை


அடிப்பாவி. . . .
பேசினோம். . .  பழகினோம். . .
சிரித்தோம். . .  மகிழ்ந்தோம். . .
முற்றும் உணர்ந்தபின்
முழுதாய் மனம் தேற்றி
தயங்கித் தயங்கி தைரியம் ஏற்றி
பல முறை பயிற்சித்து
ஒரு முறை சொன்னேன்.
சொன்னாயே ஒரு வார்த்தை
"சரி தான். டபாய்க்காதடா"

-தமிழ் வசந்தன்