Wednesday, July 28, 2010

நீர்மேல் எழுத்து

என்னவெல்லாம் செய்தாய். . . .
நீரில் கோலமிட்டாய்
மணலில் வீடு செய்தாய்
கரையில் எழுதிவைத்தாய்
அவை அழிந்தபோதெல்லாம்
அழுதேன் - நீ
ஆசையாய் வடித்ததை எண்ணி! - நீயோ
ஆசையையே அழித்துவிட்டு
ஆயாசமாய்ப் போகிறாய்!

-தமிழ் வசந்தன்